Tuesday, September 21, 2010

அறிமுகம்

சகல மானிட உயிர்களுக்கும் தெரிவிப்பது - ஏனைய, அனைத்து உயிர்களுக்கும் உகந்தது - நாம் நமது மூல 'அடி ஆதார' நிலையை அறிவது - அறிந்து அறிவை பேணுவது - இது விஷயமாக எழுதுவது.
அவ்வப்போது மானிட சமூகத்தின் வழியே மொழி, பண்பாடு, கலாசார ஓட்டத்திற்கு ஏற்றவாறு ஆங்காங்கே ஆன்மிகம் பூத்திருக்கிறது. ஒரு ரோஜா, ஒரு மல்லிகை, ஒரு தாமரை என அந்த 'அறிவு' அந்தந்த மண்ணுக்கும், அந்தந்த தாவரத்துக்கும், அந்தந்த சூழலுக்கும் ஏற்றவாறு பலவித வண்ணங்களில், பலவித வடிவங்களில், பலவித மணங்களில் வெளிப்பட்டு இருக்கிறது. இதில் அடிப்படை சத்தியம் 'மலர்வது' தானே அன்றி நிறமோ, வடிவோ, மணமோ அல்ல!. அந்த நிறத்தைக்காக்க, அல்லது அந்த வடிவைக்காக்க அல்லது அந்த மணத்தைக்காக்க என பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அதுவே 'இறுதி' உண்மை எனவும் சாற்றிக்கொள்கின்றன.முற்றறிவு பெற்ற ஞானவான்களும், அனைவரும் முற்றறிவு பெற விருப்பம் பூண்டு உபதேசிக்கின்றனர்.அவர்களின் நடையுடை பாவனைகளில் அவர் சத்தியத்தை காக்கின்றாரா? அல்லது நிருவனத்தைக்காக்கின்றாரா? பாவம் இன்னும் இங்கு காத்துக்கொள்ள வேண்டியது எதுவும் அவருக்கிருக்கிறதா? அது அவரவர்க்கே வெளிச்சம். இனி நாம் எல்லா நிறங்களையும் விடுத்து, எல்லாவடிவங்களையும் விடுத்து, எல்லா மணங்களையும் விடுத்து மலர்ச்சி என்பது எப்படி? என்பதை மட்டும் காண முயல்வோம்.

No comments:

Post a Comment