இந்த பிரபஞ்சமே வெளி நோக்கிய சர்வ சுதந்திரத்துடன் விரிந்து, படர்ந்து, விகசித்தும், உள் நோக்கிய ஒரு கட்டுப்பாட்டுடனும், என 'ஒன்று'க்கு கட்டுப்பட்டு இயங்கிக்கொண்டிருக்கிறது. அந்த 'ஒன்று' இந்த ஜடபிரபஞ்சத்தில் உயிராக அரும்பி , சுயதேடலால் வளர்ச்சியுற்று மலர துடிக்கிறது. அதுவே அறிவு.
Wednesday, September 22, 2010
உடல் மௌனம்
நாம் இப்போது உடல் மௌனம் என்பது பற்றி பார்க்கலாம். நமது உடல் அசைவதாலேயே மனம் செயல்பட ஊக்குவிக்கப்படுகிறது. உடல் அசைவற்று நினறால், மனம் செயல் புரியும் வேகம் குறையும் . இந்த பழக்கம் தொடர்ந்தால், மனம் தேவையற்ற விஷயங்களை அசை போடுவது குறையும். உடலுக்கும் நல்ல ஒய்வு கிடைக்கும். இதை முதலில் சப்பணமிட்டு அமர்வதில் இருந்து துவங்கலாம். அதி காலை நேரத்தில் எழுந்து காலைக்கடன்களை எல்லாம் முடித்து விட்டு உடலை நன்றாக நடந்து, ஓடி மூச்சிரைக்க உடல் பயிற்சி செய்து, உங்கள் உடலிலுள்ள திசுக்கள் அனைத்தையும் நன்றாக விழிக்க வைத்து , அனைத்தையும் உழைக்க வைத்து அவைகளுக்கு ஒய்வு தேவைப்படும் அளவுக்கு வேலை வாங்கி விட்டு பின் குளித்துவிட்டு நல்ல காற்றோட்டமான இடத்தில் அமர்ந்து சப்பணமிட்டு முதுகை நிமிர்த்தி நேராக அமர்ந்து இடது கையை உள்ளங்கை மேல்நோக்கி விரித்து மடிமீது வைத்துக்கொள்ளவும். பின் வலது கையை மேல் நோக்கி விரித்து இடது கையின் மீது வைத்து பாதியளவு மூடிக்கொள்ளவும். உடலில் எந்த வித இறுக்கமும் இன்றி தளர்த்தி விடவும். நான்கு, ஐந்து முறை மூச்சை நன்றக ஆழமாக இழுத்து கடைசி மூச்சு வரை நன்றாக முழுவதுமாக வெளியே விட்டு பின் முழு அளவாக மூச்சை உள்ளே இழுத்து வெகு சீராக மெதுவாக எல்லா மூச்சையும் வெளியே விடவும். எவ்வளவு ஆழமாக, எவ்வளவு நீளமாக முடியுமோ அவ்வளவு ஆழமாக, அவ்வளவு நீளமாக பயிற்சி செய்யவும். உடலிலுள்ள திசுக்கள் நன்கு தளர்ச்சி யடையும் வரை இதை செய்யலாம். சுபாவமாக எப்படி முடிகிறதோ அப்படி செய்யலாம். கொஞ்சமும் வருத்திக்கொள்ள வேண்டாம். நன்றாக ஆழ்ந்து மூச்சு பயிற்சி செய்து வந்தால், மனதின் தேவையற்ற அலைச்சல் குறையும். உடலைஒரு ஒய்வு உணர்வோடு, ஒரு சுக உணர்வோடு இருத்தி வைத்து உங்கள் கவனத்தை உங்கள் வலது நாசியும், இடது நாசியும் கூடும் இடமான புருவ மத்தியில் நிறுத்தி, தொடர்ந்து வலது நாசி சுவாசமும், இடது நாசி சுவாசமும் சந்தித்து கொள்ளும் அந்த சுவாச உணர்விலேயே கவனம் கலையாது கவனித்து வாருங்கள். உங்கள் உடல் சிறிதும் அசைவற்று ( சுவாசத்தை தவிர ) இருக்கும் நேரமே உடல் மௌனம் என்பது. இந்த உடல் மௌனத்தை உங்களால் எவ்வளவு நேரம் வைத்திருக்க முடியுமோ அவ்வளவு நேரம் வைத்திருங்கள். ஆரம்ப காலங்களில் இது மிக கஷ்டமாக இருக்கும். இதுவரை நமது உடல் இதற்க்கு பழக்கப்படவில்லை என்பதால். ஒரு அரை மணி நேரம் தினமும் இப்பயிற்சி செய்து வந்தால், உடலுக்கு இது பழக்கமாகி சந்தோஷமாக இதில் ஈடுபட தொடக்கி விடும். உடலுக்கு இது ஒரு சுக உணர்ச்சி தானே! சீக்கிரம் உடல் இதை ஏற்று பழகிக்கொள்ளும். இந்த பயிற்சி செய்யும் ஒவ்வொரு முறையும் இதை சுகமாக உணர்ந்து செய்வது முக்கியம். அப்படி நீங்கள் செய்து வர ஒரே மாதத்தில் உடல் இதற்கு தயாராகி தானாக காலையில் எழுந்து அமர்ந்து கொள்ளும் விந்தையை காண்பீர்கள். கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் எப்போதும் இப்பயிற்சியை நீங்கள் துவங்கும் நேரம் ஒரே நேரமாக அமைய பார்த்துக்கொள்ளுங்கள். உதாரணத்திற்கு ஒரு நாள் ஆறு மணிக்கு, ஒருநாள் ஏழு மணிக்கு , அல்லது ஐந்து மணிக்கு என நேரத்தை மாற்றாதீர்கள். சரியாக ஆறு பத்து என்றால், தினமும் அந்த ஆறு பத்தே என நேரத்தை பராமரித்து வாருங்கள். அப்பொழுதுதான் அது உங்கள் ஜீனில் சரியாக அமர்ந்து பழக்கப்படும். எது ஒன்றும் பழக்கப்படுவது கடிகார சுற்றுப்படியே அமைவதால் இது சாத்தியமாகிறது. இது உங்கள் உடலின் தகவமைப்பு.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment