Thursday, September 23, 2010

கற்பனை மௌனம்

இந்த கற்பனை மௌனம் என்பது ஓரிடத்தில் நாம் சற்று அயர்ந்து அமர்ந்திருக்கும் போதும் கூட, மனம் சதா அலை பாய்ந்து கொண்டிருப்பதை அறிவீர்கள். அது ஏதாவது ஒரு விஷயத்தை கற்பனை செய்து கொண்டே இருக்கும். அது ஏற்கனவே நம் வாழ்வில் நடந்த ஏதாவது ஒரு சம்பவமாக இருக்கலாம், அல்லது ஒரு சம்பவத்தை நாமே நமக்கு விருப்பப்பட்டபடி கற்பனையில் ஓட விட்டு மகிழ்ந்து கொண்டிருப்பதாக இருக்கலாம், அல்லது கற்பனையில் தோன்றி உங்களை பயமுறுத்தும் ஒரு காட்சியாக இருக்கலாம். எண்ணங்களே இல்லாது கூட, மனத்திரையில் ஏதாவது பிம்பங்கள் தொடர்ந்து வந்து கொண்டேயிருப்பதாக இருக்கலாம். அதாவது அப்போதைக்கு எந்த சம்பந்தமுமே இல்லாத ஒன்றாக இருப்பது கற்பனை மௌனம் என்பது. அந்த கணத்தில் உங்களுக்கு எந்த விதத்திலும் சம்பந்தப்படாத ஒரு கற்பனை காட்சியாக இருக்கலாம். இது ஏன்இப்படி தேவையேயில்லாமல் தோன்றுகிறது? அது மனதின் சுபாவம். மனதிற்கு இது தான் வேலை.அது எப்போதுமே உங்களை அலார்டாக வைத்திருக்க விரும்புகிறது. அது நினைக்கிறது " இந்த சமூகம் நீங்கள் நினைக்கிற மாதிரி நல்ல சமூகம் கிடையாது, உங்களைசுற்றியுள்ள நபர்கள் நம்பிக்கைக்கு உரியவர்கள் கிடையாது, எந்த நேரமும், எந்த விதத்திலாவது உங்களுக்கு ஆபத்து நிகழக்கூடும் எப்போதுமே நீங்கள் அலார்டாக இருக்க வேண்டும்.இப்படி 'நான்' அலார்டாக இருந்ததினாலேயே நீங்கள் இன்னும் உயிரோடு இருக்கிறீர்கள்." இப்படி உங்கள் மனம் நினைக்கிறது. அதுவே உண்மையும் கூட! அதனாலேயே அது சதா ஏதாவது செய்து கொண்டிருக்க வேண்டி இருக்கிறது. அது அதனுடைய தொழில். ஆனால் நாம் அந்த மனதின் கற்பனை காட்சிகளை கவனிக்க வேண்டும் என்பதில்லை. அதை கவனிப்பதாலும், அதனை பின் தொடர்வதாலும் நமக்கு சக்தி வீணாக விரயம் ஆகிறது. நமக்கு சக்தி குறைகிறது. நீங்கள் எப்போதாவது உங்கள் வேலைக்காரர்செய்து கொண்டிருக்கும் வேலையையே பொழுதெல்லாம் கவனித்துக்கொண்டு இருப்பீர்கள? அது உங்கள் வேலைக்காரருடைய டூட்டி. அவர் உங்களுடைய செக்யூரிடி. அவர் அவருடைய வேலையை கவனிக்கிறார். எப்போதாவது அவர் உங்களுக்கு கொடுக்கும் அலார்ட் விசிலை மட்டும் கவனித்தால் போதுமானது. இது போலத்தான் நீங்களும் உங்களுடைய மனதை துரத்திக்கொண்டே அலையாமல் ( இது உங்களை பாதுகாக்க ஒருவரிடம் செக்யூரிட்டி பொறுப்பை கொடுத்துவிட்டு, வீணாக அவரையே சந்தேகப்பட்டு அவரையே பொழுதெல்லாம் கவனித்துக்கொண்டி இருப்பதற்கு சமமானது .)நீங்கள் வேலைக்காரர் இல்லை. நீங்கள் முதலாளி. உங்களுக்கெனமுக்கியமான விஷயங்கள் இருக்கிறது நீங்கள் கவனித்துக்கொள்ள! அனைத்தையும் கவனித்து நிர்வகிக்க வேண்டியவர் நீங்கள்தான். உங்கள் செக்யூரிட்டி சொல்லும் எல்லாவற்றையும் நீங்கள் அப்படியே ஏற்றுக்கொள்ளக்கூடாது. ஆனால் என்ன செய்ய? மொத்த நிர்வாகத்தையும் செக்யூரிடியிடமே விட்டு பல காலம் ஆகிவிட்டதே என்கிறீர்களா? எவன் சோம்பேறியோ அவனே முழு நிர்வாகத்தையும் செக்யூரிடியிடம் விட்டு விட்டு , செக்யூரிட்டி சொல்லுவதை அப்படியே மேற்கொள்கிறான். ( இவரையெல்லாம் சொகுசாக சேற்றில் புரளும் பன்றிக்கு சமமாக கருதலாம் ) தன்னிடம் நிர்வாகத்தை எவன் வைத்திருக்கிறானோ அவன் விழிப்பானவன். நீங்கள் விழிப்பானவராக இருப்பதற்கே இந்த கற்பனை மௌனம் பற்றி பேசப்படுகிறது.நீங்கள் ஏதாவது வேலை செய்யும்போழுதோ, அல்லது சும்மா இருக்குபோழுதோ மனதை கவனியுங்கள். அங்கு ஏதாவது ஓடிக்கொண்டேயிருக்கும் . அந்த கற்பனை காட்சிகளை தொடர்ந்து கவனிப்பதோ, அந்த காட்சியில் லயித்து பின் தொடர்வதோ இனி விட்டு விடுங்கள்.அந்த காட்சிகளையோ, கற்பனை உருககளையோ கவனிக்காது விட்டுவிடுவீர்களானால் நாட்பட, நாட்பட அதன் ஆதிக்கம் குறைந்து போகும். அதற்க்கு உங்களுக்கு ஒரு விழிப்புணர்வு தேவை. அந்த காட்சிகளை தவிர்த்து வருதலே 'கற்பனை மௌனம்' . தன் முதலாளி தன் பேச்சை எடுத்துக் கொள்வதில்லையென தெரிந்தபின், அந்த செக்யூரிட்டி ஓயாமல் முதலாளியிடம் பேசுவதை குறைத்துக்கொள்கிறான். நீங்கள் ஏதாவது அதிகப்படியாக கவனத்தோடு செயல்புரியுங்கள், அல்லது மனசை கவனிக்காது சற்று சும்மா இருங்கள். இதுவும் உங்கள் பழக்கத்தினாலேயே வசப்படும். இதையும் உங்கள் மனதிற்கு, உங்கள் உடலிற்கு பழக்கப்படுத்த வேண்டியிருக்கிறது. அதாவது தேவையில்லாமல் உங்கள் மனதை பின் தொடராதீர்கள்.

No comments:

Post a Comment